வெப்ப உணர்திறன் கொண்ட புதிய வகை பாம்பு இனம் ஒன்று அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் காமெங் மாவட்டத்தில் உள்ள காடு ஒன்றில் சிவப்பு நிற தோலை உடைய தனித்துவமான வெப்ப உணர்திறன் கொண்ட பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை பாம்புகளை அசோக் கேப்டன் என்பவர் தலைமையிலான ஊர்வன பற்றிய அறிஞர்கள் சிலர் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய அசோக் கேப்டன் இந்த அருணாச்சல் வகை பாம்புகள் பற்றி இதுவரை எதுவும் அறியப்படவில்லை. இதுவரை ஒரேயொரு ஆண் பாம்பு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடத்தப்படும் ஆய்வின் மூலம் இதன் குணாதிசியங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் இதுவரை மலபார்(Malabar), ஹார்ஸ்ஷூ(Horseshoe), ஹம்ப் நோஸ்ட்(Hump-nosed) and இமாலயன்(Himalayan) ஆகிய 4 வகையான வெப்ப உணர்திறன் கொண்ட புதிய வகை பாம்பு இனங்கள் உள்ளன.